குடியரசு தின விழா - தமுமுக சார்பில் ரத்ததானம்

பள்ளப்பட்டியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமுமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-01-30 05:28 GMT
குடியரசு தின விழாவை நாடெங்கும் சிறப்பாக கொண்டாடினர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட, பள்ளப்பட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமையில், இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு, ரத்ததான முகாம் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நகர செயலாளர்கள் சிராஜுதீன், அபுதாகிர், மருத்துவர் அணி செயலாளர் மற்றொரு அபுதாஹிர், பொருளாளர் லுக்மான், நுகர்வோர் அணி மாவட்ட செயலாளர் யூனிஸ், பாப்புலர் அபுதாகிர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சார்பில் பழ ஜூஸ் மற்றும் பிஸ்கட்டுகளும் வழங்கப்பட்டது. மேலும், ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News