குடியரசுதின விழா – தேசியகொடியை ஏற்றிய திருவாரூர் ஆட்சியர்

75வது குடியரசு தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஏற்றி வைத்தார்.

Update: 2024-01-27 05:14 GMT

குடியரசு தின விழா

திருவாரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்தட்டவளாக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பினை பார்வையிட்டார் .கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News