நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை !

திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் வெளியேற்றப்பட்டதாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2024-03-29 11:47 GMT

 புகார் மனு

திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் வெளியேற்றப்பட்டதாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் அண்ணா பஞ்சாலை தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதில்பரணி மில்லில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். மேலும் ஊழியர்களை கொடுமைப்படுத்துவதாகவும், அவர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை எனவும், தற்போது வெளியேற்றப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.
Tags:    

Similar News