போரூர் ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை அகற்ற கோரிக்கை

போரூர் ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை அகற்ற கோரிக்கை

Update: 2024-06-19 10:55 GMT

ஆகாய தாமரை

போரூர் ஏரியில் குளிக்க சென்ற நபர், ஆகாய தாமரை செடிகளில் சிக்கி உயிரிழந்த நிலையிலும், ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. சென்னைக்கு மிக அருகில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, போரூர் ஏரி துார் வாரப்பட்டு, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது. மேலும், 2017ம் ஆண்டு இந்த ஏரிக்கரையில், 1.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக, தினசரி 40 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது, இந்த ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இந்த செடிகளால், நீர்பரப்புக்கு ஆக்சிஜன், சூரிய ஒளி செல்வது தடைபட்டு நீர்வாழ் உயிரினங்கள், நன்மை தரும் செடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.
Tags:    

Similar News