சமுதாய நலக்கூடத்தை புதுப்பிக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்கல் சமுதாய நலக்கூடத்தை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-22 08:57 GMT
சமுதாய நலக்கூடத்தை புதுப்பிக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம் ஒன்றியம், நெடுங்கல் ஊராட்சி பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதியில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை இந்த சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வந்தனர்.தற்போது, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சமுதாய நலக்கூடம் பயன்படுத்தப்படாமல் சீரழிந்துள்ளது.

இதனால், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்துார், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பயன்பாடின்றி சீரழிந்துள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து புதுப்பிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News