கல்லறைக்கு செல்ல பாலம்‌ கட்டி தர கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கொண்டிக்குளம் ஊராட்சியில் வாய்க்காலை கடந்து கல்லறை தோட்டம் செல்ல சிறு பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-19 01:30 GMT
கல்லறைத் தோட்டம்
பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளம் ஊராட்சியில், கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக கல்லறை தோட்டம் அமைந்துள்ளது.  அந்த இடத்திற்கு செல்லும் வழியில் பொதுப்பணித்துறையின் கிளை வாய்க்கால் குறுக்கிடுகிறது. இறந்தவர்களின் உடலை கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்பவர்கள் வாய்க்காலுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இதனை தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்ட இடத்தில் சிறு பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டிக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News