திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை

Update: 2023-11-17 10:19 GMT

வானதி சீனிவாசன்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் வசூலிப்பது பெரும் அநீதி" திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

ரூ.100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2,000 ஆகவும், ரூ.100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ.1,000 ஆகவும், ரூ.500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News