தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தெரு மின் விளக்கை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-09 02:24 GMT

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News