தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை !
மீனாட்சிப்பேட்டையில் தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 05:37 GMT
மீனாட்சிப்பேட்டை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் செல்லும் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.