சகதியான சாலையை சீரமைக்க கோரிக்கை

திம்மையன்பேட்டையில் மிக் ஜாம் புயல் கனமழையால் சேதமடைந்து சகதியான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-12-24 05:47 GMT

சகதியாய் காட்சியளிக்கும் சாலை 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையன்பேட்டையில் மிக் ஜாம் புயல் கனமழையால் சேதமடைந்து சகதியான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சியில், சின்ன தெரு பகுதி உள்ளது. இத்தெருவில், 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட, 'மிக்ஜாம்' புயலின் போது பெய்த கனமழை காரணமாக, இத்தெருவில் மழைநீர் சூழ்ந்தது. மேலும், குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து அப்பகுதியினர் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், இத்தெருவில் மழைநீர் தேங்கி தற்போது வரை தெரு சகதியாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இத்தெருவில் சிமென்ட் சாலை அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News