சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையை சீரமைக்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-04 17:45 GMT

சாலையை சீரமைக்க கோரிக்கை 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அப்துல்லாபுரத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கடவுளை தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் ,குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News