போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பலூர் எம்பி.,யை காணவில்லை, கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-29 02:52 GMT

பெரம்பலூர் எம்பி.,யை காணவில்லை, கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. 

பெரம்பலூர் எம்பி.,யை  காணவில்லை, கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் மற்றும் சாதனை குறித்த புத்தகங்கள் ஐஜேகேவினர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் விநியோகம் செய்து வரும் நிலையில் இதனை பொறுத்து கொள்ள முடியாத சமூக விரோதிகள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் நகரப் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்நிலையில் போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மாவட்ட தலைவர் AVR ரகுபதி தலைமையில் ஐஜேகேவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி புகார் மனு அளித்தனர். மேலும் டாக்டர் பாரிவேந்தர் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். அவரின் சாதனை மற்றும் செயல்பாடுகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சில சமூக விரோதிகள் இச்செயலை செய்து உள்ளனர் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அன்பு துரை, மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத், பெரம்பலூர் நகர தலைவர் RC ராமலிங்கம், ஐஜேகே ஆலத்தூர் ஒன்றிய தலைவர் காமராஜ், மற்றும் ஐஜேகே , பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News