தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை

மதுராந்தகம் அருகே தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-01 04:32 GMT
தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை

மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாக்கம் ஊராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. ஏரிக்கரையின் மீது உள்ள மண் சாலையை தாதங்குப்பம், புளிக்கொறடு, வசந்தவாடி, வில்வராயநல்லுார், ஆமையம்பட்டு, திருளச்சேரி, பொறையூர் உள்ளிட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர்மற்றும் வெளியூர் பகுதிக்குவேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். ஏரிக்கரையின் மீது மண் சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில்இருசக்கர வாகனங்கள்மற்றும் ஆட்டோவில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக, தார் சாலை அமைத்து தரக்கோரி, பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News