கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி மீட்பு

ஆலங்குளம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2024-05-06 10:25 GMT
 பைல் படம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பகுதியில் உள்ள குறுங்காவனம் கிராமத்தில் விவசாயக்கிணற்றில் காட்டுப்பன்றி தண்ணீர் தேடிச் சென்றபோது எதிர்பாரவிதமாக கிணற்றில் தவறி விழுந்தது இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சுரண்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அடுத்து விரைந்து சென்ற அவர்கள் கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றியை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்து பின்னர் வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர். இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News