கிணற்றில் முதியவர் பிணமாக மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே கிணற்றில் முதியவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-05-08 11:07 GMT

சடலம் மீட்பு 

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோணி என்கிற சுப்பிரமணி (68). இவரது மனைவி சுந்தரி (58). இவர்களுக்கு சுந்தர், முனுசாமி என்ற மகன்களும், ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 6ம் தேதி மாலை சுப்பிரமணி தனது விவசாய நிலத்திற்க்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சுந்தரி, தனது கணவரை தேடி சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் கிணற்றில் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது சுப்பிரமணி கிணற்றில பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் உதவியுடன் சுப்பிரமணி உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News