இறந்த ஆண் குழந்தை மீட்பு - போலிசார் விசாரணை !

குப்பை மேட்டில் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்த விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-27 09:35 GMT

போலிசார் விசாரணை

பிறந்து சில மணி நேரத்தில் இறந்த நிலையில் குப்பை மேட்டில் ஆண் குழந்தை மீட்பு. காவல்துறை விசாரணை. கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் எதிரே குப்பை மேடு உள்ளது.

இந்த குப்பை மேட்டில் பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளதை அப்பகுதி பொதுமக்கள் அறிந்து அது குறித்து அருகில் உள்ள வடசேரி கிராம நிர்வாக அலுவலர் கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கணேசன் இது குறித்து தோகைமலை காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த நிலையில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தோகைமலை காவல்துறையினர்.

குப்பை மேட்டில் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்த விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News