திருவண்ணாமலை அருகே கிராம அலுவலரை மாற்ற கோரி தீர்மானம்
திருவண்ணாமலை அருகே கிராம அலுவலரை மாற்ற கோரி ஊர் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றபட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-27 13:21 GMT
மனு அளித்த மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத கிராம அலுவலர் அவர்களை கண்டித்தும்,
அவர் வாங்கும் லஞ்சம் பற்றியும் புகார் மனுவை பொதுமக்கள் கிராம தலைவரிடம் கொடுத்ததுடன் கூட்டத்தில் அவரை பணி நீக்கவோ அல்லது பணி இடமாற்றம் செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் கிராம தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.