காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய வருவாய்துறை அலுவலம்

ஆத்தூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினரின் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடிய காணப்பட்டது.

Update: 2024-02-27 08:25 GMT

ஆத்தூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினரின் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடிய காணப்பட்டது. 

தமிழகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக தங்களின் கோரிக்கைகளான பணி பாதுகாப்பு மற்றும் காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

செவி சாய்க்காத அரசை கண்டித்து வருவாய் துறை அலுவலர்களான தாசில்தார் துணை தாசில்தார் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அறிவித்திருந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர், வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் பணியை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன, இதில் பொதுமக்கள் பல்வேறு வகையான சான்றிதழ்களை பெற கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்,

Tags:    

Similar News