வாணியம்பாடியில் வாழ்வுரிமை கூட்டமைப்பு அமைப்பினர் கண்டன போராட்டம்

வாணியம்பாடியில் வாழ்வுரிமை கூட்டமைப்பு அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தினர்.

Update: 2024-03-06 06:49 GMT

வாணியம்பாடியில் வாழ்வுரிமை கூட்டமைப்பு அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தினர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாழ்வுரிமை கூட்டமைப்பு அமைப்பினர் கண்டன போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே, வாழ்வுரிமை கூட்டமைப்பினர் பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்தும், தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட சட்டமியற்றகோரியும், நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Tags:    

Similar News