தரமில்லாத சாலைகளால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தரமற்ற தார்சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-28 14:54 GMT

தரமற்ற சாலையால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகேயுள்ள புத்தேந்தல் ஊராட்சியில் புதிய தார்சாலை போடப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்காக போடப்பட்ட தற்காலிக சர்வீஸ் ரோடு தரமில்லாமல் போடப்பட்ட காரணத்தால் அந்த வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று சாலையில் செல்ல முடியாமல் கவிழும் நிலையில் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையை சரி செய்து விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரான நாகேசுவரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News