மயூரநாதர் ஆலயத்தில் பொதுமக்களுக்கு திருமுறை பயிற்சி

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் பொதுமக்களுக்கு திருமுறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Update: 2024-05-19 13:31 GMT

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் பொதுமக்களுக்கு திருமுறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில், திருவாடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு திருமுறை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயில் வளாகத்தில் உள்ள பள்ளியில் தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகள் குறித்து பொது மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நான்கு வயது குழந்தைகள் முதல் என் 90 வயது முதியவர்கள் வரை 60 பேர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாதம்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பிறகு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது
Tags:    

Similar News