சாரணர்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் போராட்டம்

சாரணர்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-23 08:58 GMT

காலிக்குடங்களுடன் சாலை மறியல் 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ளது கணவாய்பட்டி பஞ்சாயத்து. இதில் கணவாய்பட்டி, சக்கிலியன்கொடை, கொரசனம்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இதில் கணவாய்பட்டி பங்களா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கணவாய்பட்டி பங்களா பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வீதிகளில் மின்விளக்குகள் எரிவதில்லை.

மேலும் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் உள்ளது. அடிப்படை வசதிகள் கோரி பலமுறை சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இதுவரை நடவடிக்கை இல்லை. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க உள்ளோம்’ என்றனர்.

Tags:    

Similar News