சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-02-07 08:42 GMT

சாலை விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக்கல்லூரி முன்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆற்காடு சாலையில் தொடங்கி காந்தி சாலை மார்க்கெட் வழியாக புறவழிச்சாலையில் சென்று கல்லூரி வரை நிறைவுற்றது. மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

Tags:    

Similar News