குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா

குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது

Update: 2023-10-19 14:52 GMT

விழிப்புணர்வு பேரணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி கொடியசைத்து துவக்கி வைத்தார்.வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் காவல் நிலையம், குமாரபாளையம் தாலுக்கா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆகியோர் இணைந்து நடத்திய இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் போது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினர்.


Tags:    

Similar News