ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தையற்கலை தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

Update: 2024-02-27 07:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தையற்கலை தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சென்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தையற்கலை தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சென்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 27ஆம் தேதி தையற்கலை தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடத்தினர்.

பேரணியை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பரமக்குடி ஐந்து முனைப்பகுதியில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முத்தாலம்மன் கோவில் படித்துரை அருகே நிறைவு பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பெண் தையல் கலை தொழிலாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட தையற்கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News