ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தில் சாலை பாதுகாப்பு விழா

செஞ்சி அருகே ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தில் நடந்த சாலை பாதுகாப்பு மாத விழாவில் போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

Update: 2024-01-25 05:17 GMT

விழிப்புணர்வு பிரச்சாரம் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண் ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் கலந் துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் முதல்வர்கள் மணிகண்டன், முருகதாஸ், கோவிந்த ராஜ், சசிகுமார், செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News