மண் அரிப்பால் சாலையோர பள்ளம் - விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம் - வேலுார் சாலையில் மழையால் மண் அரிப்பு காரணமாக சாலையோரம் பள்ளம் - இதனை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 06:25 GMT
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் - விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம் - வேலுார் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், சிறுகாவேரிபாக்கம் என்.ஜி.ஓ., நகர் அருகில், மழையால் மண் அரிப்பு காரணமாக சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, விபத்தை தடுக்கும் வகையில், சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில், மண்ணை அணைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்."