போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகள் - பொதுமக்கள் அவதி

Update: 2023-11-10 04:57 GMT

கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலை, காஞ்சிபுரம் சாலை காந்தி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன.பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்து அவ்வப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி பயணிகள் படுகாயம் அடைவதும் வாடிக்கையாகி விட்டது. மேலும் காலையும், மாலையும் பள்ளி, கல்லூரிசெல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவ்வப்போது மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தாலும் இதே நிலையே தொடர்கிறது.இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News