காதலர் தினத்தில் திருமணம் செய்த காதல் ஜோடிகள்
வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இருவரும் காதலர் தினமான நேற்று கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
Update: 2024-02-15 06:21 GMT
எரியோடு நல்லமனார்கோட்டை சுரேஷ் (28), பில்லமநாயக்கன்பட்டி சரஸ்வதி (27). வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவரும் கல்லுாரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு ஏற்படும் என நினைத்த இருவரும் காதலர் தினமான நேற்று கோயில் ஒன்றில் திருமணம் முடித்து கொண்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.