கட்டுமான பணியின் போது மேற்கூரை சரிந்து விபத்து - 2 பேர் காயம்

பர்கூர் அருகே தனியார் கல்லூரி கட்டுமான பணியின் போது மேற்பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

Update: 2023-12-29 07:30 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நைனார்புரம் பகுதியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தற்பொழுது மருந்தாளுனர் படிப்பிற்கான புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பணியாளர்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்த போது மேற்கூரை  திடீரென சரசரவென சரிந்து கீழே விழுந்துள்ளது. இதில் அங்கு பணியில் இருந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாதன், தாமோதரன் ஆகிய இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அடிபட்ட இரண்டு பேரையும் மீட்ட கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் பிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பணியின் பொழுது தனியார் கல்லூரியின் கட்டுமான மேற்கூரை இடிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் புதிய  கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வுகள் நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News