தேனியில் ஒரு கோடி ரூபாய் மோசடி : மூன்று பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Update: 2024-04-01 11:40 GMT

பைல் படம்


தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர விக்னேஷ் இவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது தங்கை மற்றும் அவரது உறவினர்கள் எட்டு பேரிடம் பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கனகதுர்கா சரண்யா ஆகியோர் மொத்தம் ஒரு கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்
Tags:    

Similar News