விவசாயிகள் குறைதீா் முகாமில் ரூ.9.41 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில், ரூ.9.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-08 07:03 GMT

தென்காசியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில், ரூ.9.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி தலைமை வகித்தாா்.

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.4லட்சம் மானியத்தில்சுழற்கலப்பைகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வெங்காய கிட்டங்கி அமைப்பதற்காக ரூ.1லட்சத்து75ஆயிரம் மானியமும், தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு மிளகாய் மற்றும் தக்காளி காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ24ஆயிரம் மானியமும், தோட்டக்கலைத் துறை மூலம் ஒரு பயனாளிக்கு அயல்நாடுசுற்றுலா சென்று வந்ததற்கான சான்றிதழ், மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.3லட்சத்து 41ஆயிரத்து 250 மானியத்தில் பறக்கும் தெளிப்பான் (ட்ரோன்) உள்பட 18 பயனாளிகளுக்கு ரூ.9.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைமாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். முன்னதாக, ஆலங்குளம் வட்டார வேளாண்மைத்துறையினா், வாசுதேவநல்லூா் மற்றும் சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறையினா் மற்றும் மாவட்ட பட்டு வளா்ச்சித் துறையினா் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலா் தொடங்கி துவக்கி வைத்து பாா்வையிட்டாா்.

விவசாயிகளிடமிருந்து 345 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலா்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா். வேளாண்மை இணை இயக்குநா் பத்மாவதி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கனகம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News