ஒன்றிய அரசை குற்றம் சாட்டிய ஆர்.எஸ் பாரதி

திருநெல்வேலியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் மழை வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசினார்.

Update: 2024-02-09 09:32 GMT

ஆர்எஸ் பாரதி

நெல்லை மாவட்டம், தாழையூத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு பல நலத்திட்டங்களை தந்தாலும் ஆட்சி ஒரு நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது.

மழை வெள்ளத்தால் தென்மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளானது.அப்போது முதல்வர் நிவாரண நிதி வழங்கினார். இயற்கை பேரிடருக்கு ஒன்றிய அரசிடம் உரிய நிதியை கேட்டால் தர மறுக்கிறார்கள் என்று பரபரப்பாக பேசினார்.

Tags:    

Similar News