கல்லூரி மாணவர்களின் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை வாலாஜா ஒன்றியம், தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடைபெற்றது.

Update: 2024-05-24 16:03 GMT

வேளாண் கல்லூரி மாணவர்கள்

ஆற்காடு அடுத்த கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பா.தீபக், ரா.மோகன்ராஜ், செ.முருகானந்தம், கோ.நவீன் குமார், பா.நவீன்குமார், ரா.நித்திஷ்குமார் ஆகியோர் கிராமப்புற பகுதியில் வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனர். வேளாண்மை அதிகாரி மேகலா கலந்து கொண்டு, மாணவர்களின் பணிகளை ஆய்வு செய்தார். வளர்ச்சி திட்டங்கள், திட்டமிடல், நிர்வாகத்தில் கிராம பொது மக்களின் அறிவு மற்றும் கருத்துக்களை எடுத்துரைப்பது குறித்து கிராம மக்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News