ஓமலூர் : ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு :ரூ.7,52,062.33க்கு விற்பனை
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.52 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-27 17:46 GMT
ஓமலூரில் தேங்காய் பருப்பு ஏலம்
சேலம் மாவட்டம், ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக 22விவசாயிகள் 227மூட்டைகளில் 97.45குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் இன்று ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 7லட்சத்து 52ஆயிரத்து 62ரூபாய் 33காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 85ரூபாய் 85காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 66ரூபாய் 75காசுக்கும், சராசரி விலையாக 85ரூபாய் 25காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த விலைக்கு 4வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாக வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி இன்று தகவல் தெரிவித்தார்.