சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சம ஊதியம் வழங்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
Update: 2024-02-26 18:27 GMT
சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்தும், சம ஊதியம் வழங்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டையில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் இடைநிலை ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.