விசிக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை விபத்தில் மரணமடைந்த தோழர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

Update: 2024-01-30 09:16 GMT
விசிக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கரும்புலி முத்துக்குமார் அவர்களுக்கும்,வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டம் வில்லியநல்லூரை சார்ந்த தோழர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த உத்திரகுமார்,அன்பு,யுவராஜ் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மதுராந்தகம் அம்பேத்கர் சிலை எதிரே ஒன்றிய செயலாளர்கள் கதிர்வாணன், தயாநிதி நகர செயலாளர் அ.கிட்டு பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் செய்யூர் பொன்னிவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் விஜியகுமார், தொகுதி செயலாளர் பாக்கம் பேரறிவாளன்,உள்ளிட்ட விசிக கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் முகாம் நிர்வாகிகள் ஆதித்தமிழன்,பொய்யாமொழி,ராஜபாரதி, மூர்த்தி,எடிசன்,தமிழரசு,நூர்ஜகான்,மதன்,ராஜேஷ்,ரமணா,இதயவாணன்,உதயா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News