நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-13 14:31 GMT
சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடினர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.