வாராப்பூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

வாராப்பூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-14 13:09 GMT

சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வாராப்பூர் ஊராட்சி அலுவலகம் முன் மற்றும் குறும்பலூர் தொடக்கப்பள்ளி முன் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சித் தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை வகித்தார்.

விழாவின் பொங்கலிட்டு. பொதுமக்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது.ஊராட்சி துணைத் தலைவர் சித்ரா சுப்பையா, வார்டு உறுப்பினர் பழனியாயி, ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி பங்கேற்றனர்.

இதுபோல கொப்பனாபட்டிஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சித்த் தலைவர் மேனகா மகேஸ்வரன் உள்ளிட்டோர் தலைமை வகித்தார்.

விழாவில் தூய்மை காவலர்களுக்கு சீருடைகள் வழங்கி, பள்ளி மாணவர்களுக்குபோட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது.மாவட்டக் குழு உறுப்பினர் குழிபிறை பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் மோகனா சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News