மணல் கடத்தியவர் கைது !
வாகனத்தில் மணல் முட்டைகளை கடத்தி வந்த நபரை போலிசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 05:07 GMT
மணல் கடத்தியவர் கைது
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் மாகரல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் மணல் முட்டைகளை கடத்தி வந்த வாலிபரை மறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் குருவிமலை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 24, என்பதும், அப்பகுதி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதைடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த மாகரல் போலீசார், பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.