திருக்கோவிலூரில் மணல் கடத்தல் - டிராக்டர் பறிமுதல்
திருக்கோவிலுாரில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Update: 2023-11-06 05:22 GMT
திருக்கோவிலுார் சப்இன்ஸ்பெக்டர் மதன்மோகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டி.கே.மண்டபம், தென்பெண்ணையாற்றிலிருந்து மணல் மூட்டைகளுடன் வந்த டிராக்டர் பறிமுதல் செய்து மணல் கடத்தி வந்த டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த தணிகாசலம் (52)என்பவரை கைது செய்தனர்.