கடையநல்லூா் அருகே மணல் கடத்தல் - 4 போ் கைது

Update: 2023-12-13 06:55 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சொக்கம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முகமதுகனி தலைமையிலான போலீஸாா், சொக்கம்பட்டி பகுதியில் ரோந்து மேற்கொண்டனா். அப்போது, 2 டிராக்டா்களில் சிலா் அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து, அய்யாதுரை(40), வேல்முருகன் (27), மகாராஜன்(30), லட்சுமண பாண்டியன்(39) ஆகியோரை கைது செய்து, டிராக்டா்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், முத்துக்குமாா்(35), மகுமாா்(25), விக்னேஷ் (26) , குழந்தை ராஜா(35) ஆகியோரை தேடி வருகின்றனா்.
Tags:    

Similar News