மணல் கடத்தல் - மூவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-02-09 05:03 GMT
மணல் கடத்தல் 

உளுந்துார்பேட்டை அடுத்த டி.ஒரத்துார் அருகே கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், 37; சேந்தமங்கலம், மகேந்திரன், 40; அமுல்ராஜ், 39; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News