மானாமதுரை அருகே மணல் திருட்டு - போலீசார் விசாரணை
மானாமதுரை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-20 05:52 GMT
மணல் திருட்டு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பூக்குளம் வைகை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை போலீசார் சோதனைக்கு சென்ற போது அப்பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிலர் மண் அள்ளும் இயந்திரத்தை விட்டுவிட்டு தப்பினர். போலீசார் மண் அள்ளும்இயந்திரத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து, தப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.