கங்கைகொண்ட சோழபுரத்தில் கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு இரண்டாம் நாளில் கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம். செய்யப்பட்டது.

Update: 2024-04-23 00:39 GMT

கங்கைகொண்ட சோழபுரத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு இரண்டாம் நாளில் கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம். செய்யப்பட்டது.

அரியலூர், ஏப்.22- ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருநாள் விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு பிரகதீஸ்வரர் பிறந்த நாயகி மற்றும் கணக்க விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபா ராதனை நடைபெற்றது. நேற்று நேற்று இரண்டாம் நாளான நேற்று கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் 16 வகையான பொருட்களான திரவிய பொடி மாவு பொடி மஞ்சள் சந்தனம் இளநீர் பால் தயிர் பன்னீர் உட்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. கனக விநாயகருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News