சங்கரன்கோவில் திமுகவினர் எம்பியிடம் கோரிக்கை மனு

சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான 16 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழியிடம் திமுகவினர் வழங்கினர்.

Update: 2024-02-07 10:26 GMT
கனிமொழி எம்பி யிடம் கோரிக்கை மனு
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர் கனிமொழி எம்.பி  தலைமையில் நாகர்கோவிலில் தனியார் மஹாலில் வைத்து நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 16 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News