கந்தர்வகோட்டை அருகே மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு

கந்தர்வகோட்டை அருகே உலக வெப்ப மண்டல தினத்தில் மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-07-01 12:22 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத்தின் சார்பில் உலக வெப்ப மண்டல தினத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா உலக வெப்ப மண்டல தினம் குறித்து பேசினார். இந்நிகழ்வில் தற்காலிக ஆசிரியர்கள் உமா, புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News