எடப்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ2 லட்சம் மதிப்பிலான சேலை பறிமுதல் !

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ2 லட்சம் மதிப்பிலான 65 புடவை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-01 12:03 GMT

 தேர்தல் பறக்கும் படை

எடப்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 65 புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து எடப்பாடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 11 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள வனவாசி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜோதிபாசு, தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளம்பிள்ளையில் இருந்து டெம்போ மூலம் உரிய ஆவணங்கள்யின்றி கொண்டுவரப்பட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 65 புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News