சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவரும் இணைய வேண்டும்

சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவரும் கண்டிப்பாக இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-18 16:12 GMT

முன்னாள் முதல்வர்

 மதுரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்எஸ்வி சித்தன் குடும்ப திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து பேசுகையில்;நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது.

பேசிக்கொண்டே இருக்கிறோம். சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் கூட்டணியாக இணைவீர்களா?இணைய வேண்டும் என விரும்புகிறேன். உறுதியாக இணைய வேண்டும். எங்களை பொறுத்தவரையில் பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறோம். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பாஜக தந்துள்ளதால் ஆதரவை தவிர மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும்.ஈபிஎஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்குவீர்களா?பொறுத்திருங்கள் என பேசினார்.

Tags:    

Similar News