கொடநாடு எஸ்டேட் குறித்து சசிகலா புதிய தகவல்

கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவிற்கு தனது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தும் விதமாக இருந்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-19 13:34 GMT

கொடநாடு எஸ்டேட்டில் சசிகலா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேகோடநாடு பங்களாவின் அருகே ஜெயலலிதாவின் முழு உருவ சிலையுடன் மணி மண்டபம் கட்ட இன்று காலை பூமி பூஜையுடன் ஆடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோடநாட்டிற்கு வரும் போது ஜெயலலிதா ஒரு குடும்ப பெண்ணை போன்று தொழிலாளர்களிடம் அன்பாக பழகியதாகவும் ஜெயலலிதாவிற்கு கோடநாடு மிகவும் பிடித்த இடம் என்பதால் பெங்களூர் சிறையிலிருந்து வந்த போதே கொடநாட்டில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என நினைத்ததாகவும் அதன் படி இன்று சிறப்பு பூஜைகளுடன் அடிக்கல் நாட்டியதாக தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் இந்த மணி மண்டபம் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையுடன் திறக்கபடும் என்றார்.

Tags:    

Similar News